Monday, November 22, 2010

நான் பார்த்த அதிர்ச்சி

இரண்டாயிரத்து  ஒன்பது அக்டோபர் ஏழு ,காலை பதினோரு மணிக்கு நடந்த சம்பவம் என் வாழ்க்கையில் மறக்கமுடியாத தருணம் அன்று நான் எனது பயணம் மாயவரத்தை நோக்கி  திண்டிவனம் பாதையில் சென்று கொண்டு இருந்தேன் . அப்பொழுது வண்டலூர் உயிரியல் பூங்காவை பார்த்தேன். நான் அதுவரையில் அங்கு சென்றது கிடையாது , என்மனதில் பூங்காவை பார்க்கவேண்டும் என்று ஆசை தோன்றியது. உடனே உள்ளே செல்லலாம் என்று முடிவு செய்து அனுமதி சீட்டை பெற்று கொண்டு  உள்ளே சென்றேன் . மக்கள் கூட்டத்தில் அந்த அழகான விலங்கினத்தின் உலகத்தை பார்த்தேன் , அந்த விலங்கினத்தின் மீது இருந்த மரியாதையை கூடியது . அந்த நொடியில் சிகிச்சை அளிக்கபட்டு இருக்கும்  ஒரு குட்டி மானின் கதறல் சத்தம் கேட்டது . அப்பொழுது அது தன் தாயை தான் அழைகிறது என்பதை உணர்ந்து நானும் என் தாயை நினைத்து கொண்டு எனது பயணத்தை தொடங்கினேன் . கூடுவாஞ்சேரி எனும் ஒரு பகுதியை கடக்கும் பொழுது , நான் பார்த்த அதிர்ச்சி  ஐம்பது வயதை தாண்டிய ஒரு முதியவர் சாலை ஓரத்தில் உறங்கி கொண்டு இருபதை  பார்த்தேன், அவரது காலில் ஈ கள் கூட்டம் அவரது காலில் அடிபட்டு சீல் பிடித்து இருந்தது நான் அதிர்ச்சி ஆனேன் ஒரு மானுக்கு கிடைக்கும்
மருத்துவஉதவி மனிதனுக்கு கிடைபதில்லை என்று. நான் அவரை எழுப்பினேன் அப்பொழுது அவர் எழுந்து பார்த்து ஓடிவிட்டார் பக்கத்தில் இருந்த  ஒருவர் கூறினார் அவர் பைத்தியம் என்று. அபொழுதுதான் நான் நினைத்தேன் அவரை பைத்தியம் என்று நினைத்து நாம் எல்லாம் பைத்தியமாய் திரிகிறோம் இதுதான் சுதந்திரம் வாங்கிய இந்தியாவோ  அரசாங்கம் மானுக்கு கொடுக்கும் சலுகைகளே மனிதனுக்கு ஏன் கொடுபதில்லை என்ற விடை தெரியாத கேள்வியோடு என் பயணத்தை தொடங்கினேன்.    

தமிழன்பாடல்

தேசமே என்தேசமே நீ குண்டும் குழியாய் இருப்பதுபோல்
 என் மனதும் குழியாய் இருக்கிறது
அரசியல் கட்சிகள் பல இருந்தும்
 நல் ஆட்சி எங்கே நடக்கிறது
 அரசாங்கம் என்று ஒன்றும் இருந்தும்
  நியாயம் எங்கே கிடைக்கிறது